அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி நடக்கிறது.. எடப்பாடி பழனிச்சாமி புகார்
அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி நடைபெற்று வருவதாகவும், அதனை முறியடிக்கத் தயார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்: தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்டத்திற்காக, ரூ.198 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம், கடல்நீரை குடிநீராக்க ரூ.1000 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஆகியவற்றை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:

குடிநீர் பிரச்சனை
தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையைப் போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கெங்கு குடிநீர் பிரச்சனை அதிகம் இருக்கிறதோ அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை மக்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளின் மூலம் தேங்கியுள்ள நீர்நிலைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நன்னீரில் உருவாகும் கொசுவே டெங்குவிற்கு காரணம். எனவே, அவற்றை அகற்றத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ்ஸுக்கு உரிமை
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த அடிப்படையில் ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகக் கூறியிருக்கிறார்.

கவிழ்க்கச் சூழ்ச்சி
தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்குமே நன்றாகத் தெரியும். இந்தச் சூழ்ச்சியை நாங்கள் முறியடித்துக் கொண்டிருக்கிறோம்.

மக்களின் தேவை
தமிழகத்தில் அதிமுக கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியில் எந்தக் குறையும் இல்லை. மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து அமைச்சர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications