அன்னிய செலவாணி மோசடி வழக்கு...ஆஜராகாத டிடிவி தினகரன் - மார்ச் 27ல் தீர்ப்பு
அன்னியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி டிடிவி தினகரன் மனு மீதான தீர்ப்பு மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் இன்று டி.டி.வி.தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையை ஒத்திவைக்க டிடிவி.தினகரன் கோரிய வழக்கில் தீர்ப்பு 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக அம்மா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.

1996ஆம் ஆண்டு, ஜெ.ஜெ. டிவிக்கு அப்லிங்க் சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.
இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் இரண்டு வழக்குகளில் இருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இது தொடர்பான வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் பணியின் காரணமாக வழக்கை இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, இருதரப்பினரும் பிற்பகலில் தங்களது வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதனிடையே இடைத்தேர்தல் முடியும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து மார்ச் 27ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தீர்ப்பை ஒத்திவைத்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி மலர்மதி உத்தரவு பிறப்பித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications