ராஜீவ் கொலை..7 தமிழரின் விடுதலைக்காக கோட்டையை நோக்கிய பேரணியில் பங்கேற்க இயக்குனர் ராம் அழைப்பு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 தமிழரின் விடுதலைக்காக வேலூரில் இருந்து சென்னை கோட்டையை நோக்கிய பேரணியில் பங்கேற்க இயக்குனர் ராம் அழைப்பு விடுத்துள்ளார்.
பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யக்கோரி 11ம் தேதி வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் பெரும் திரளானோர் கலந்து கொள்ளவுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. தற்போது மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் எனப் பலரும் பேரணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக கோட்டையை நோக்கிய பேரணியில் பங்கேற்க இயக்குனர் ராம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் அந்த கொலைக்கு சம்பந்தமில்லாத பேரறிவாளன் உள்ளிட்டோர் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயமாகும்.
பேரறிவாளனை விசாரணை செய்த அதிகாரியே அவர் குற்றவாளி அல்ல என நீண்ட காலத்திற்கு பின்னர் கூறியிருக்கிறார். ஆனாலும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படாமல் சிறையிலேயே இருக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என அற்புதம் அம்மாள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னுடைய மகன் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஜனநாயக முறையில் பல போராட்டங்களை நடத்தி வருகிறார் அற்புதம் அம்மாள். மகனுடைய விடுதலைக்காகவும் மற்றவர்களின் விடுதலைக்காகவும் போராடி வரும் அற்புதம் அம்மாளுக்காகவும், பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யக்கோரி நடைபெறவுள்ள மோட்டார் சைக்கிள் பேரணியில் நாம் நம்முடைய வாழ்க்கையில் இருந்து ஒரு நாளை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ராம் கூறினார்.
முன்னதாக நடிகர் சத்யராஜ், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications