முக்கிய முடிவை தேமுதிக அறிவிக்கவுள்ள உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி இல்லை!
உளுந்தூர்ப்பேட்டை: லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற முக்கிய முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ள உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்தில் மாநாடு போட்டுத்தான் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவை தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு எடுத்தது. அதேபோல இப்போது லோக்சபா தேர்தல் வருவதால் மறுபடியும் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார் விஜயகாந்த்.
இந்த மாநாடு உளுந்தூர்ப்பேட்டையில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக எறஞ்சி என்ற இடத்தில் பந்தல் போட்டு மேடை அமைத்து வருகின்றனர். ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தற்போது காவல்துறையின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

ஜனவரி 11ம் தேதியே தேமுதிக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் அனுமதி கோரி மாவட்ட எஸ்.பியிடம் பெட்டிஷன் கொடுத்தனர். ஆனால் இதுவரை அனுமதி தரப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. இதனால் தேமுதிக தரப்பு டென்ஷனாகியுள்ளது.
இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனு அளித்துள்ளோம். ஆனாலும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. மனோகரிடம் கேட்டபோது உள்ளூர் போலீசார் தான் இதுபற்றி முடிவு எடுப்பார்கள். எனவே உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.யிடம் கேளுங்கள் என்று கூறி விட்டார் என்றார்.
இதனால் தேமுதிக தரப்பு டென்ஷனாக உள்ளது. அனுமதி வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் கோர்ட்டை நாடவும் அவர்கள் தயாராகி வருவதாக தெரிகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications