திமுக தொடர்ந்த குட்கா வழக்கு.. முன்கூட்டியே விசாரிக்க ஹைகோர்ட் முடிவு!
திமுக சார்பில் எம்.எல்.ஏ. அன்பழகன், சென்னை ஹைகோர்ட்டில் தொடர்ந்த குட்கா வழக்கு வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அளித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ள
சென்னை: தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த குட்கா வழக்கை வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அளித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள், அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. , மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பல கோடி ரூபாய் கொடுத்தற்கான ஆவணங்கள் சிக்கியது.
இந்த ஆவணங்களின் அடிப்படையில், தமிழக அரசுக்கு வருமான வரித்துறை ஆணையர் கடிதம் அனுப்பினார். இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பினர்.
இதையடுத்து, புகையிலை பொருட்களை விற்பனை செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியுள்ளதால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி தி.மு.க. சார்பில், எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டசபையில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுடன் வந்ததாக, தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது உரிமைக்குழு விசாரணை நடத்த, அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் முன்பு தி.மு.க. வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, 'குட்கா ஊழல் முறைகேடு குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள அதேநேரத்தில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது இந்த விவகாரம் குறித்து வேறு வழியில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. எனவே, செப்டம்பர் 11ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்ட அன்பழகன் வழக்கை, முன் கூட்டியே விசாரணைக்கு எடுக்கவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக குறிப்பிட்டு உத்தரவு அளித்தனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications