எங்களுக்கு எதிராக செய்தி வெளியிடக் கூடாது: பத்திரிக்கைகளுக்கு பறந்த உத்தரவு?
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிகாரத்தில் உள்ள குறித்து கடும் விமர்சனங்கள் செய்யக் கூடாது என பத்திரிக்கை அதிபர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் வருங்கால பாரத பிரதமராக வருவார் எனவே, அதிமுகவை வெற்றி பெற செய்யுங்கள் என அக்கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான செய்தி நிறுவனங்களுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
அது என்னவென்றால் இந்த தேர்தலில் அதிகாரத்தில் உள்ளவர்களின் வெற்றியை பாதிக்கும் எந்த செய்தியையும் நாளிதழ்கள், வார இதழ்கள், வாரம் இருமுறை வரும் இதழ்கள், தொலைக்காட்சிகள் போன்றவைகள் வெளியிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
இதற்கிடையே, சில முன்னணி நாளிதழ்களுக்கு சுமார் ரூ. 8 கோடி அளவு அரசு விளம்பரம் தரப்பட்டுள்ளதாம்.