மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரை கைது செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி யை அடுத்த கொண்டல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றும் மூவேந்தன் என்பவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
கொண்டல் கிராமத்தில் செயல்பட்டு வருவது ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி என்றாலும் அதில் அப்பகுதியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளும் பெருமளவில் பயின்று வருகின்றனர். அந்த மாணவிகளிடம் தற்காலிக ஆசிரியர் மூவேந்தன் நீண்ட நாட்களாகவே தவறாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
பல நேரங்களில் மாணவிகளிடம் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறியுள்ளனர்.
மாணவ-மாணவிகளுக்கு படிப்பையும், நல்ல புத்தியையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியரே மிருகமாக மாறி இதுபோல நடந்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. வேலியே பயிரை மேயும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர அனுமதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
நினைத்துப் பார்க்கவே வலிக்கும் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மூவேந்தனுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டால்தான் இனிவரும் காலங்களில் இதுபோன்ற இழிவான செயல் களில் ஈடுபட மற்றவர்கள் அஞ்சுவார்கள்.
இந்த கொடூரத்தை நிகழ்த்திய தற்காலிக ஆசிரியர் மூவேந்தன் கொண்டல் ஆதிதிராவிட காலனியை சேர்ந்தவர் ஆவார். அவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்ட 10 மாணவிகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். இதை வைத்து பார்க்கும்போது நடந்தவை அனைத்தும் திட்டமிட்ட செயல்களாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. இதன் பின்னணியில் காதல் நாடகங்களை ஊக்குவிக்கும் கும்பல் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவனுக்கு துணையாக இருந்த பள்ளியின் மற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்று கூறி உள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications