மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரை கைது செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி யை அடுத்த கொண்டல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றும் மூவேந்தன் என்பவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
கொண்டல் கிராமத்தில் செயல்பட்டு வருவது ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி என்றாலும் அதில் அப்பகுதியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளும் பெருமளவில் பயின்று வருகின்றனர். அந்த மாணவிகளிடம் தற்காலிக ஆசிரியர் மூவேந்தன் நீண்ட நாட்களாகவே தவறாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
பல நேரங்களில் மாணவிகளிடம் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறியுள்ளனர்.
மாணவ-மாணவிகளுக்கு படிப்பையும், நல்ல புத்தியையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியரே மிருகமாக மாறி இதுபோல நடந்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. வேலியே பயிரை மேயும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர அனுமதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
நினைத்துப் பார்க்கவே வலிக்கும் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மூவேந்தனுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டால்தான் இனிவரும் காலங்களில் இதுபோன்ற இழிவான செயல் களில் ஈடுபட மற்றவர்கள் அஞ்சுவார்கள்.
இந்த கொடூரத்தை நிகழ்த்திய தற்காலிக ஆசிரியர் மூவேந்தன் கொண்டல் ஆதிதிராவிட காலனியை சேர்ந்தவர் ஆவார். அவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்ட 10 மாணவிகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். இதை வைத்து பார்க்கும்போது நடந்தவை அனைத்தும் திட்டமிட்ட செயல்களாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. இதன் பின்னணியில் காதல் நாடகங்களை ஊக்குவிக்கும் கும்பல் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவனுக்கு துணையாக இருந்த பள்ளியின் மற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்று கூறி உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications