கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கத்தில் 20,000 கன அடி நீர் திறப்பு- அடையாற்றில் பெரும் வெள்ளம்!!
சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளிலிருந்து இன்று காலை முதல் உபரி நீர் அதிகமாக திறந்துவிடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மட்டும் 20,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் அடையாற்றில் பயங்கர வெள்லப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலைகளுள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் இன்று காலை முதல் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 3,000 கன அடியில் தொடங்கி 7,500 கனஅடியாக அதிகரித்தது. பின்னர் தற்போது 20,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
புழல் ஏரியிலிருந்து 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 12,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணலி, புதுநகர், விச்சூர், ஈச்சாங்கோவில் ஆகிய பகுதிவாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#ChennaiRains Be Safe 🙍🏻
#chennaiweather #ChennaiFloods pic.twitter.com/4xug9IWPQ8
— Hashini (@hashini1005) December 1, 2015 இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவன் தெரிவித்துள்ளதாவது:
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள திருத்தணி தரைப்பாலம் உடைந்துள்ளது. மேலும், தாமரைப்பாக்கம், வடகரை உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் , 22 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications