திமுக மனித சங்கிலியில் பட்டாசுடன் வெடித்து சிதறிய போலி நோட்டுக்கள்... பரபரப்பு
தாம்பரத்தில் திமுகவினர் நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் போலி ரூபாய் நோட்டுகள் பறக்கவிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து , மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப்பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
சென்னையில் திமுகவினர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். மு.க.ஸ்டாலின் திறந்த ஆட்டோவில் நின்ற படியே மனித சங்கிலியை பார்வையிட்டார். அவர் புரசைவாக்கம், டவுட்டன், பட்டாளம், குன்னூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், பெரவள்ளூர் வழியாக கொளத்தூர் வரை சென்று பேரணியை பார்வையிட்டார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் நந்தனம் சிக்னலில் தொடங்கி மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தாம்பரம் திமுக சார்பில், பல்லாவரத்தில் இருந்து பெருங்களத்தூர் வரை தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு நீண்ட வரிசையில் கைக்கார்த்து நின்றனர்.
தாம்பரத்தில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் திமுகவினர் திடீரென பட்டாசு வெடித்தனர். அப்போது அதில் இருந்து போலி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நடிகர், நடிகைகள் படத்துடன் பறந்து சாலைகளில் விழுந்தன. இவை பார்ப்பதற்கு அசல் ரூபாய் நோட்டுகள் போல இருந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செல்லாத நோட்டுக்களை பட்டாசு கட்டுக்குள் போட்டு கொளுத்தி விட்டார்களோ என்று பலரும் ஆர்வத்துடன் வந்து பார்த்தனர். அவை போலி நோட்டுக்கள் என்று தெரியவே அதை கீழே போட்டு விட்டுச் சென்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications