சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கக் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்துக்கு சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு ஆட்களை லாரி, வேன் மற்றும் பஸ்களில் ஏற்றிச்செல்வதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனுக்கு தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலர் தபஸ் குமார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசியல் கட்சியினர் நடத்தும் பிரசார பொதுக் கூட்டங்களுக்கு பள்ளி பேருந்துகள், லாரி போன்ற சரக்கு வாகனங்களில் அரசியல் ஆள்கள் அழைத்து வரப்படுவதாகப் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதுபோன்ற செயல்கள் மிகவும் அபாயகரமானவை.
இந்தச் செயல்களால் காப்பீடுகள்கூட இல்லாத விலை மதிப்புமிக்க உயிர்களுக்கு அபாயம் நேரக் கூடும். இதுபோன்ற தருணங்களில் மோட்டார் வாகனச் சட்டம்-விதிகளை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்துவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.
எனவே தமிழ்நாட்டில் மோட்டார் வாகன சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி பள்ளிக்கூட பஸ்கள் மற்றும் லாரிகளில் ஆட்களை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்றிச்செல்ல தடை விதிக்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்து வாகனங்களை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்ட தடங்களில் மட்டுமே இயக்க வேண்டும்.
லாரி போன்ற சரக்கு வாகனங்களில் பொதுக் கூட்டங்களுக்கு ஆள்களை ஏற்றிச் செல்வது முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கடிதத்தின் மீது உரிய உத்தரவைகளை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இதுதொடர்பான நடவடிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications