வெயிலில் வாடவேண்டாம்….வாக்குப்பதிவு நேரம் 2 மணிநேரம் அதிகரிப்பு: பிரவீண்குமார்
சென்னை: கோடை காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாக்களிப்பதற்கு 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை (9 மணி நேரம்) நடத்தப்படுகிறது. தற்போது வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவும், ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தை ஒரு மணிநேரம் நீட்டித்தும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வாக்குப்பதிவு நேரத்தை மாற்றி அமைப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
ஓட்டுப்பதிவு செய்யும் நேர அளவு, 8 மணி நேரத்துக்கும் குறைவாக இருக்கக் கூடாது. தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கும் காலகட்டம், மிகவும் உஷ்ணமாக இருக்கும் என்பதை தேர்தல் ஆணையம் அறிந்துள்ளது. சில இடங்களில் சூரிய உதயமும் அஸ்தமனமும் முன்கூட்டியே இருக்கக்கூடும்.
எனவே, வாக்காளர்களின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதியிலும் ஓட்டுப்பதிவு நேரத்தை காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நீட்டிக்க (11 மணி நேரம்) முடிவு செய்யப்படுகிறது.
இதன் மூலம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் ஏராளமான வாக்காளர்கள் வந்து வாக்களிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது" என்று அதில் கூறியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications