வெயிலில் வாடவேண்டாம்….வாக்குப்பதிவு நேரம் 2 மணிநேரம் அதிகரிப்பு: பிரவீண்குமார்
சென்னை: கோடை காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாக்களிப்பதற்கு 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை (9 மணி நேரம்) நடத்தப்படுகிறது. தற்போது வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவும், ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தை ஒரு மணிநேரம் நீட்டித்தும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வாக்குப்பதிவு நேரத்தை மாற்றி அமைப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
ஓட்டுப்பதிவு செய்யும் நேர அளவு, 8 மணி நேரத்துக்கும் குறைவாக இருக்கக் கூடாது. தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கும் காலகட்டம், மிகவும் உஷ்ணமாக இருக்கும் என்பதை தேர்தல் ஆணையம் அறிந்துள்ளது. சில இடங்களில் சூரிய உதயமும் அஸ்தமனமும் முன்கூட்டியே இருக்கக்கூடும்.
எனவே, வாக்காளர்களின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதியிலும் ஓட்டுப்பதிவு நேரத்தை காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நீட்டிக்க (11 மணி நேரம்) முடிவு செய்யப்படுகிறது.
இதன் மூலம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் ஏராளமான வாக்காளர்கள் வந்து வாக்களிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது" என்று அதில் கூறியுள்ளார்.
-
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications