ஆய்வு, ஆலோசனை என மும்முரமாகும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்
ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு மையங்களை தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு மையங்களையும் வாக்கு எண்ணும் இடங்களையும் காவல் துறையினருடன் பார்வையிட்டு தேர்தல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப் பதிவு நடைபெற இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் அங்கு இரு தினங்களாக ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சியினர் பணப்பட்டுவாடா புகாரை கூறி வந்தனர்.

புகார்
தேர்தல் அதிகாரிகளும் அவ்வப்போது ரொக்கத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை போலீஸில் ஒப்படைத்து வந்தனர். பணவிநியோகம் அதிகரித்துள்ளதாக திமுக, பாஜக ஆகியன புகார் கூறியதாலும் ஊடகங்களும் வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டதால் தேர்தல் ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திட்டமிட்டபடி தேர்தல்
இதனிடையே பணப்புகார்கள் வந்தாலும் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் புகாருக்குள்ளான போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனிடையே 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு மையங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

போலீஸ் அதிகாரிகள்
ஆர்கே நகருக்குள்பட்ட வாக்கு சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், சென்னை காவல் துறை ஆணையர் விஸ்வநாதனுடன் ஆய்வு செய்தார். அப்போது வாக்குச் சாவடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள்
வரும் 21-ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பூத்துக்குள் ஏஜென்ட்களுக்கான இடம், வாக்கு பதிவு முடிந்தவுடன் வாக்கு பதிவு இயந்திரங்களும் வைக்கப்படும் இடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். துணை ராணுவத்தினர் இந்த தேர்தல் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications