வேட்பாளர்கள் செலவைக் கண்காணிக்க 3 பார்வையாளர்கள்... டிசம்பர் 7ல் சென்னை வருகை!
வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க 3 செலவினப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களைப் பார்வையிடுவதற்காக 3 செலவினப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இது வரை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலை நீடிக்கிறது.

விருப்ப மனுக்களைப் பெற்று அதன் அடிப்படையில் நாளை வேட்பாளரை இறுதி செய்ய அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் முடிந்த கையோடு பிரச்சாரமும் தொடங்கிவிடும். எனவே வேட்பாளர்களின் செலவுகளை பார்வையிடுவதற்காக தேர்தல் ஆணையம் 3 செலவினப் பார்வையாளர்களை நியமித்துள்ளது.
வெளிமாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான குமார் பிரனவ், ஷீல் அஷீஷ், ஜகோரியா உள்ளிட்ட 3 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள் 3 பேரும் டிசம்பர் 7ம் தேதி சென்னை வருகின்றனர். அதன் பின்னர் இவர்கள் வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications