ஜெயலலிதாவின் எஃகு கோட்டை ஈரோடு... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்!
ஈரோடு மாவட்டம் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு: அரசு மருத்துவமனை அருகே புதிதாக ரூ.58.54 கோடி செலவில் மேம்பாலம் கட்டடப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு மாவட்டம் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை என்றார்.
இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கருப்பண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தினகரன் ஆதரவாளர் ஆன பெருந்துறை சட்டசபை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் மேம்பாலப் பணிக்கான அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்கவில்லை.
இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசினார்.

ஜெ.வின் எஃகு கோட்டை
அப்போது ஈரோடு மாவட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை என்றார். ஈரோட்டில் தொழிற்சாலைகளும், கைத்தறி மற்றும் விசைத்தறி ஆலைகளும் நாளுக்கு நாள் பெருகி வருவதாக கூறினார்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர்..
குடிநீர் பிரச்சனையை போக்கும் வகையில் ரூ.484 கோடி செலவில் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஈரோடு மக்களுக்கு கிடைக்கும் என்றார்.

குறைந்த விலையில் மக்கள்
மேலும் பேசிய அவர் மணல் குவாரிகளை ஒழுங்கு முறைப்படுத்தி குறைந்த விலையில் மக்களுக்கு மணல் வழங்கப்படும் என்றார். மொடக்குறிச்சியில் பேருந்து நிலையம், கொபியில் புறவழிச்சாலை அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்றார்.

இல்லம் தேடி மணல் வரும்
மேலும் புதிதாக ஈரோட்டில் கட்டப்பட உள்ள மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார். மணல் குவாரிகளை அரசு ஏற்று நடத்துவதால் ஒரு வாரத்திற்குள் இல்லம் தேடி மணல் வரும் என்றார். 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்ற மாவட்டம் ஈரோடு என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications