வானில் இன்று ரெண்டு “நிலா”- புரளிச் செய்தியை நம்பவேண்டாம்- தமிழ்நாடு அறிவியல் கழகம்!
சென்னை: வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் எனவும், செவ்வாய் கிரகம் மிக பெரிதாக தெரியும் எனவும் வலைதளத்தில் உலாவரும் செய்திகள் புரளிதான் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியுள்ளார்.
வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் என வலைதளத்தில் புரளி பரவி வருகிறது.
இதுதொடர்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.

இரண்டு நிலா கட்டுக்கதை:
இவை வெறும் புரளிதான். இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். செவ்வாயும், பூமியும் சூரியனை மையமாக வைத்து நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன.

சுற்றி வரும் கிரகங்கள்:
இவ்வாறு ஒவ்வொரு கிரகங்களும் தன் பாதையில் சுற்றி வரும்போது, அவற்றிற்கு இடையே தொலைவு மாறி மாறி அமையும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான சராசரி தொலைவு 22.5 கோடி கிலோ மீட்டர் ஆகும்.

கூடிக் குறையும் தொலைவு:
மேலும், கிரகங்கள் சுற்றும் பாதை எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. நீள்வட்ட பாதையில் உள்ள தடுமாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு முறையும் அருகாமையில் வரும்போதும் பூமி, செவ்வாய் தொலைவு சற்றே கூடி குறையும்.

5.5 கோடி கிலோ மீட்டர்:
கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொலைவு 5.5 கோடி கிலோ மீட்டராக இருந்தது. இதுதான் கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில் மிக குறைவான தொலைவாக இருந்தது.

ஒளிப்புள்ளியாக தெரியும்:
அதுபோல 2 கிரகங்களும் மிக அருகே வரும் நிலை மறுபடியும் 2287 ஆம் ஆண்டில் தான் ஏற்படும். எனினும், இந்த நாட்களிலும் வெறும் கண்களுக்கு ஒளி புள்ளியாகத்தான் செவ்வாய் தென்படும். எனவே அறிவியல் பூர்வமற்ற விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications