காயும் காவிரி டெல்டா... மாண்டுபோகும் விவசாயிகள்.. இழப்பீடு கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
டெல்டா பகுதியில் வறட்சி ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிபிம் கோரியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்தப் ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முற்றாக இல்லை. சம்பா சாகுபடி கருகிவிட்டது. மேலும் விவசாயிகள் தற்கொலைகள், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் என இறப்பு எண்ணிக்கை என்பது 40தை எட்டிவிட்டது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் சிபிஎம் சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வறட்சியால் அதிர்ச்சியுற்று இறந்த விவசாயிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், தலா 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும். நெல் சாகுபடி பொய்த்துப் போன நிலையில் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவிவசாயிகளின் நலனை வலியுறுத்தித்தான் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழக அரசு விவசாயிகளின் தற்கொலைகள், வறட்சிப் பற்றி பேசுவதில்லை. நிவாரணம் பற்றி வாய் திறப்பதில்லை என்று ஜி, ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications