பொங்கல் கொண்டாடி வெள்ளத்தால் ஏற்பட்ட காயத்தை ஆத்திய சென்னை மக்கள்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் பொங்கல் வைத்து அதை கடவுளுக்கு படைத்துவிட்டு அக்கம் பக்கத்தினருக்கு அளித்து மகிழ்ந்தனர்.
கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினர். கல்லூரிகளில் மாணவிகள் சேலை கட்டி பொங்கல் பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீண்ட சென்னையில் மக்கள் கட்டு கட்டாக கரும்புகளை வாங்கிச் சென்றனர். வெள்ளத்தில் உடைமைகளை இழந்து தத்தளித்த சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும் சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது.