மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உயிரினங்களை பாதுகாக்க அதிரடி திட்டம்
செங்கோட்டை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக கேரளா எல்லை பகுதியான நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி,கேரளவனப் பகுதியும் இணைந்து பல ஆயிரம் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கும் இப்பகுதிகயில் ஏராளமான அருவிகளும், அரியவகை மூலிகை செடிகளும், விலங்கினங்களும், ஊர்வன வகைகளும் அதிகளவில் வாழ்கின்றன.

இந்த நிலையில் இந்த இருமானில எல்லைகளில் உள்ள வனங்களில் வசிக்கும் உயிரினங்கள் இருமானில வனப் பகுதிகளிலும் சுற்றி திரியும் வண்ணம் திட்டங்களை உலக வங்கியின் உதவியோடு நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் கூறுவதை மெய்பிக்கும் வண்ணம் நேற்று இருமானில எல்லையோர மாவட்ட வன அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தி்த்த நெல்லை மாவட்ட வனத்துறை தலைவரும், களக்காடு புலிகள் காப்பாகத்தின் இயக்குனருமான வெங்கேடஷ் கூறுகையில், வனப்பகுதியிலும், நிலப்பரப்பிலும் நிலங்களும் மிக முக்கியமான நிலப்பரப்பு ஆகும், அகஸ்தியர் மலை நிலப்பரப்பிலும் பெரியார் மலை நிலப்பரப்பிலும் வண உயிரினங்கள் அதிகளவில் வசித்து வருகின்றன.
இந்த இரு மாநில எல்லை களில் வசிக்கும் வன உயிரினங்கள் இடம் பெயர்வதற்கான வழிகள் மற்றும் வணவிலங்குகள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு மற்றும் இந்த பகுதியில் உலக வங்கி உயிர் பண்மை திட்டத்தினை நடைமுறைபடுத்துவதன் சாத்திய கூறுகள் குறித்து எல்லையோர தமிழக கேரள வனத்துறையினர் ஆய்வு நடத்தினோம்.
இந்த ஆய்வு கள் மூலம் தென்மலை,செந்தூரணி,ஆகிய வனப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் அதிகாரிகள் தரப்பில் வன உயிரினங்களை பாதுகாத்திடவும்,கருத்துக்களை பரிமாற்றம் செய்வது பாதுகாப்பது,எல்லைகளை பாதுகாப்பது, உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வனங்கள் வளமாக இருப்பதற்கும் வன உயிரினங்கள் இருப்பது மிகவும் நல்லது. உயிரினங்களால் வனம் வளமடையும்,நீர் நிலைகள் மேம்படும்.
தமிழ்நாடு, கேரளா வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை, மிளா போன்ற வன உயிரினங்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும் இந்த வன உயிரினங்கள் வனப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்திடவும்,வனப்பகுதிகளில் நடமாடும் வண்ணம் வாகனங்களில் சிக்கி உயிரிழக்காத வண்ணம் பூமிக்கடியிலும் பூமிக்கு மேல் பகுதிகளிலும் பாதைகளை அமைக்கும் வண்ணம் முயற்சிகளை மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்கான முதல்கட்ட முயற்சி தான் இந்த ஆய்வு என்றார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications