மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உயிரினங்களை பாதுகாக்க அதிரடி திட்டம்
செங்கோட்டை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக கேரளா எல்லை பகுதியான நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி,கேரளவனப் பகுதியும் இணைந்து பல ஆயிரம் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கும் இப்பகுதிகயில் ஏராளமான அருவிகளும், அரியவகை மூலிகை செடிகளும், விலங்கினங்களும், ஊர்வன வகைகளும் அதிகளவில் வாழ்கின்றன.

இந்த நிலையில் இந்த இருமானில எல்லைகளில் உள்ள வனங்களில் வசிக்கும் உயிரினங்கள் இருமானில வனப் பகுதிகளிலும் சுற்றி திரியும் வண்ணம் திட்டங்களை உலக வங்கியின் உதவியோடு நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் கூறுவதை மெய்பிக்கும் வண்ணம் நேற்று இருமானில எல்லையோர மாவட்ட வன அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தி்த்த நெல்லை மாவட்ட வனத்துறை தலைவரும், களக்காடு புலிகள் காப்பாகத்தின் இயக்குனருமான வெங்கேடஷ் கூறுகையில், வனப்பகுதியிலும், நிலப்பரப்பிலும் நிலங்களும் மிக முக்கியமான நிலப்பரப்பு ஆகும், அகஸ்தியர் மலை நிலப்பரப்பிலும் பெரியார் மலை நிலப்பரப்பிலும் வண உயிரினங்கள் அதிகளவில் வசித்து வருகின்றன.
இந்த இரு மாநில எல்லை களில் வசிக்கும் வன உயிரினங்கள் இடம் பெயர்வதற்கான வழிகள் மற்றும் வணவிலங்குகள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு மற்றும் இந்த பகுதியில் உலக வங்கி உயிர் பண்மை திட்டத்தினை நடைமுறைபடுத்துவதன் சாத்திய கூறுகள் குறித்து எல்லையோர தமிழக கேரள வனத்துறையினர் ஆய்வு நடத்தினோம்.
இந்த ஆய்வு கள் மூலம் தென்மலை,செந்தூரணி,ஆகிய வனப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் அதிகாரிகள் தரப்பில் வன உயிரினங்களை பாதுகாத்திடவும்,கருத்துக்களை பரிமாற்றம் செய்வது பாதுகாப்பது,எல்லைகளை பாதுகாப்பது, உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வனங்கள் வளமாக இருப்பதற்கும் வன உயிரினங்கள் இருப்பது மிகவும் நல்லது. உயிரினங்களால் வனம் வளமடையும்,நீர் நிலைகள் மேம்படும்.
தமிழ்நாடு, கேரளா வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை, மிளா போன்ற வன உயிரினங்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும் இந்த வன உயிரினங்கள் வனப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்திடவும்,வனப்பகுதிகளில் நடமாடும் வண்ணம் வாகனங்களில் சிக்கி உயிரிழக்காத வண்ணம் பூமிக்கடியிலும் பூமிக்கு மேல் பகுதிகளிலும் பாதைகளை அமைக்கும் வண்ணம் முயற்சிகளை மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்கான முதல்கட்ட முயற்சி தான் இந்த ஆய்வு என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications