பொங்கலுக்கு முன்னர் இலவச வேட்டி சேலைகள் விநியோகம் – அமைச்சர் கோகுல இந்திரா அறிவிப்பு!
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு 3.5 கோடி வேட்டி, சேலைகள் இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலை உற்பத்தி குறித்த முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த ஆய்வு கூட்டத்துக்கு கைத்தறி துறை செயலாளர் ஹர்மந்தர்சிங் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.

மேலும் கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர்கள் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் கோகுல இந்திரா பேசும் போது, ‘‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது.
இதன் உற்பத்தியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அதிகாரிகள் பார்வையிட்டு பணி சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 கோடியே 46 லட்சம் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி செய்ய இலக்கு செய்யப்பட்டு உள்ளது. பணிகள் விரைவில் நடக்கிறது. பொங்கல் பண்டிகைக்குள் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்'' என்று கூறினார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications