ஆட்சியில் பங்கு என்பது இலக்கு அல்ல: குலாம் நபி ஆசாத்
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமையவேண்டும். அதே நேரத்தில் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத் இதனைத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சிக்னல் கொடுத்ததன் தொடர்ச்சியாக டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கோபாலபுரம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பேச்சு வார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூட்டணியை உறுதி செய்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல. தி.மு.க. கூட்டணியில் இணைய உள்ள வேறு கட்சிகள் குறித்து பேசுகையில், ‘வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தி.மு.க. முடிவு செய்யும் என்றார்
திமுக, காங்கிரஸ் கட்சிகள் பழமையான பாரம்பரியம் மிக்க கட்சிகள் என்று ஆசாத் தெரிவித்தார். ஏற்கனவே பலமுறை திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications