ஆட்சியில் பங்கு என்பது இலக்கு அல்ல: குலாம் நபி ஆசாத்
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமையவேண்டும். அதே நேரத்தில் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத் இதனைத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சிக்னல் கொடுத்ததன் தொடர்ச்சியாக டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கோபாலபுரம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பேச்சு வார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூட்டணியை உறுதி செய்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல. தி.மு.க. கூட்டணியில் இணைய உள்ள வேறு கட்சிகள் குறித்து பேசுகையில், ‘வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தி.மு.க. முடிவு செய்யும் என்றார்
திமுக, காங்கிரஸ் கட்சிகள் பழமையான பாரம்பரியம் மிக்க கட்சிகள் என்று ஆசாத் தெரிவித்தார். ஏற்கனவே பலமுறை திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications