சொத்தை அபகரித்த ‘காதல்’ கணவரை சேர்த்து வையுங்கள்... போலீசில் பெண் புகார்
சென்னை: சொத்தை அபகரித்துச் சென்ற தனது இரண்டாவது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி போலீசில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகரை சேர்ந்த சுமலதா (32) என்பவர் ஆதம்பாக்கத்தில் கண்ணாடிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த சுமலதா தனது இரண்டாவது கணவர் மீது புகார் ஒன்றை அளித்தார். அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கணவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்தேன். வருமானத்திற்காக ஆதம்பாக்கத்தில் கண்ணாடி கடை நடத்தி வருகிறேன். என் கடைக்கு வந்த ஸ்ரீகாந்த் என்ற வாலிபருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.
எனது குடும்ப வாழ்க்கை குறித்து அவரிடம் விளக்கி கூறினேன். அவர் எனக்கு ஆறுதல் கூறினார். அவரது பேச்சில் மயங்கினேன். இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்ரீகாந்திடம் கூறினேன். அவர் காலம் கடத்தி வந்தார். பலமுறை வற்புறுத்தியும் அவர் கண்டு கொள்ளவில்லை. அவர் என்னுடன் சந்தோசமாக இருந்ததற்கு நிறைய பணம் கொடுத்துள்ளேன். என்னுடைய அம்மாவிற்கு சொந்தமான நிலத்தை ஸ்ரீகாந்த் பெயரில் எழுதி கொடுத்துள்ளேன்.
ஆனால் அவர் இப்போது என்னை பார்ப்பதே கிடையாது. வேறு திருமணம் செய்ய முயற்சி செய்வதாக அறிந்தேன். இதுபற்றி மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் விசாரிக்கவில்லை. என் காதல் கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள்' என இவ்வாறு அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கடலூர் மஞ்சுளாவின் கள்ளக்காதல்.. விக்கிரவாண்டி பாலத்து மணலில் இப்படியா ஆகணும் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications