கடைசி மீனவர் மீட்கப்படும்வரை அரசு முயற்சிக்கும்.. சட்டசபையில் ஆளுநர் உரை
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் ஓகி பாதிப்பு குறித்து உரையாற்றி இருக்கிறார்.
சென்னை:தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஓகி பாதிப்பு குறித்து ஆளுநர் உரையாற்றி இருக்கிறார். தமிழக அரசு இதில் மிகவும் நன்றாக செயல்பட்டதாக அவர் பாராட்டி இருக்கிறார்.
இந்த வருடத்தில் நடக்கும் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது தொடங்கி இருக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் தனது உரையில் ''வருவாய் குறைந்த போதிலும் தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது. தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது'' என்று பாராட்டினார்.
ஓகி புயல் குறித்து பேசிய ஆளுநர் ''ஓகி புயல் பாதிப்பு நிவாரணமாக முதல்கட்டமாக ரூ.133 கோடி ஒதுக்கப்பட்டது. முதல்கட்டமாக மத்திய அரசு ரூ.401 கோடியும் ரூ.4854 கோடியை நிவாரண நிதியாகவும் வழங்க கோருகிறேன்.'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் ''கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்ப் பணியை மத்திய அரசு தொடரும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பான மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது'' என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications