மது தாக்கம் அறியும் குழு- நீங்கள் அமைக்கிறீர்களா? நாங்கள் உத்தரவிடட்டுமா? -அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
சென்னை: தமிழகத்தில் மதுவினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை அறிய நாங்களே குழுவினை ஏற்படுத்தட்டுமா என அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது ஹைகோர்ட்.
உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள அறிக்கைபடி மாநில அரசு ஆல்ஹகாலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழுவை அமைக்காவிட்டால், நீதிமன்றமே ஒரு குழுவை ஏற்படுத்துமென தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு. அவர், ஆல்கஹால் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள, டபிள்யூ.ஹெச்.ஓ செய்துள்ள பரிந்துரைகளை ஆய்ந்து நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்செய்தார்.
அவர் தன் வாதத்தில், "மாநிலத்தில் மது மற்றும் அதிகரித்துவரும் மதுவிற்பனை குறித்தும் அரசு முறையாகத் திட்டமிட்டு கொள்கைகள் எதுவும் வகுக்கவில்லை. 2008-09ல் 10,601 கோடி ரூபாயாக இருந்த மதுவிற்பனை 2012-13ல் 21,680 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதனால் மாநிலத்தில் மதுவின் தாக்கமும் அதனோடு தொடர்புடைய பிரச்சினைகளும் அதிகரித்திருக்கின்றன" என்றும் குறிப்பிட்டார்.
இவ்வழக்கை விசாரித்த முதல் அமர்வின் தலைமை நீதிபதியான எஸ். கே.கெளலும், நீதிபதி சுந்தரேஷும், "அரசுக்கு நாங்கள் கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறோம். இல்லையெனில் நாங்களே ஒரு குழுவை ஏற்படுத்த நேரும். வரும் ஜூன் 15க்குள் அரசு மதுவின் தாக்கம் பற்றி ஆராய ஒரு குழுவை ஏற்படுத்தவேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஜூன் 17க்கு ஒத்திவைத்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications