பாரத மாதாவை அவமரியாதை செய்தாரா திமுக மாஜி அவைத்தலைவர் மகன்? போலீசில் புகார்
சென்னை: தாமரைப்பூ மீது நிர்வாண நிலையில் பெண் ஒருவர் நின்றுக் கொண்டு தேசியக் கொடியை கையில் ஏந்திக் கொண்டிருக்கும் படத்தை பேஸ்புக்கில் வெளியி
ட்டதற்கு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடியில் கடை நடத்தி வருபவர் குதுப்தீன். கடந்த சில நாள்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் விவசாயிகள் குறித்து பதிவிட்ட தற்கு பதில் கருத்தை குதுப்தீன் வெளியிட்டார்.
அதில் இந்திய வரைபடத்தின் உள்ளே ஒரு பெண் நிர்வாணமாக தாமரை பூ மேலே நின்று கொண்டு கையில் தேசியக் கொடியை வைத்திருப்பது போல் வரையப்பட்ட போட்டோவை எடுத்து பதிவேற்றம் செய்திருந்தார்.
இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து இந்து முன்னணியினர் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் குதுப்தீனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் உடன்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குதுப்தீன், திமுக முன்னாள் அவைத்தலைவர் ரிபாதீன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.