சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன்.. தொண்டர்கள் அமைதி காக்கவும்.. ஜெ. தீபா
சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க உள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்ததற்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவார் என்று அதிமுக மூத்த தலைவர்கள் அறிவித்தனர். இதற்கு அதிமுகவின் இன்னொரு பிரிவினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் ரத்த உறவான அண்ணன் மகள் தீபாதான் அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், தீபா கட்சிப் பொறுப்பேற்க வர வேண்டும் என்ற பேனர்கள் தமிழகத்தின் சில மாவட்டங்களில் வைக்கப்பட்டன. 'சின்னம்மா வாழ்க' என்று சசிகலாவிற்கு கோஷமிட்டால் 'சின்னம்மா தீபா வாழ்க' என்று எதிர் கோஷங்களும் அதிமுக தொண்டர்கள் எழுப்பினர். இதற்கெல்லாம் மேலாக சேலத்தில் ஜெ.தீபா பேரவையும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்கால நலன் கருதி சரியான நேரத்தில் நிச்சயம் முடிவை அறிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தன்மீது அன்பு காட்டி பேனர்கள், கட் அவுட் வைப்பதும், தன் படத்தைப் போட்டு சுவரொட்டி ஒட்டுவது போன்ற செயல்களில் அதிமுக தொண்டர்கள் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் தீபா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி, அதிமுகவின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து செயல்பட வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தீபாவை ஆதரித்தும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பேனர் வைத்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications