சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன்.. தொண்டர்கள் அமைதி காக்கவும்.. ஜெ. தீபா
சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க உள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்ததற்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவார் என்று அதிமுக மூத்த தலைவர்கள் அறிவித்தனர். இதற்கு அதிமுகவின் இன்னொரு பிரிவினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் ரத்த உறவான அண்ணன் மகள் தீபாதான் அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், தீபா கட்சிப் பொறுப்பேற்க வர வேண்டும் என்ற பேனர்கள் தமிழகத்தின் சில மாவட்டங்களில் வைக்கப்பட்டன. 'சின்னம்மா வாழ்க' என்று சசிகலாவிற்கு கோஷமிட்டால் 'சின்னம்மா தீபா வாழ்க' என்று எதிர் கோஷங்களும் அதிமுக தொண்டர்கள் எழுப்பினர். இதற்கெல்லாம் மேலாக சேலத்தில் ஜெ.தீபா பேரவையும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்கால நலன் கருதி சரியான நேரத்தில் நிச்சயம் முடிவை அறிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தன்மீது அன்பு காட்டி பேனர்கள், கட் அவுட் வைப்பதும், தன் படத்தைப் போட்டு சுவரொட்டி ஒட்டுவது போன்ற செயல்களில் அதிமுக தொண்டர்கள் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் தீபா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி, அதிமுகவின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து செயல்பட வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தீபாவை ஆதரித்தும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பேனர் வைத்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க












Click it and Unblock the Notifications