பிக்பாஸ் குறித்து இனிமே எதுவும் சொல்லப்போறதில்ல.. ஆர்த்தியின் தடாலடி முடிவு!
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து இனி தான் எதுவும் கூறப்போவதில்லை என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து இனி தான் எதுவும் கூறப்போவதில்லை என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தவர் நடிகை ஆர்த்தி. ஜூலியை ஃபேக் என கூறி வம்பிழுத்ததால் அவர் மீது வெறுப்படைந்த ரசிகர்கள் ஆர்த்திக்கு வாக்களிக்காமால் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை காயத்ரிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் ஆர்த்தி. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் உண்மையை அறிந்த அவர் டிவிட்டரில் ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆரவ் கேடி, ஜூலி போலி
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வந்த அவர், ஓவியா உண்மையானவர், ஆரவ் கேடி, ஜூலி போலி என்றும் கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஏற்கனவே பிக்பாஸ் நிக்ழச்சியில் பங்கேற்றவர் என்பதால் அவரது கருத்துக்கள் பெரிதும் பகிரப்பட்டது.

இனி எதுவும் கூறுவதில்லை
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குறித்து தான் எதுவும் கூறப் போவதில்லை என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது கருத்துக்களை சில யூட்யூப் சேனல்கள் தனது கருத்தை தவறாக திட்டுவதைப் போல் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைதியாக பார்க்கப்போகிறேன்
இதனால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக பார்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை ஏற்க அவரது ரசிகர்கள் மறுத்துள்ளனர்.

ரசிகர்கள் வேண்டுகோள்
ஆர்த்தி தொடர்ந்து பிக்பாஸ் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்த்தியின் டிவிட்டால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications