சிலை திருட்டு வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது
பழவூர் நாறும்பூநாதர் கோயில் சிலை திருட்டு வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி பரமதுரை கைது செய்யப்பட்டார்.
சென்னை: சிலை திருட்டு வழக்கில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளைத் திருடியதாக 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று சென்னையில் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் நாறும்பூநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து 2005 ஆம் ஆண்டில் 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இந்த சிலைகள் திருடு போனது தொடர்பாக சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 18 பேர்கள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த 18 பேரில் சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேர் பல்வேறு சிலை திருட்டு வழக்குகளில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 6 பேர் வெளிநாடுகளில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. மற்ற 2 பேரை போலீஸார் தேடி வந்தனர்.
இதையடுத்து, பழவூர் நாறும்பூநாதர் கோயில் சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் பரமதேவன்பட்டியைச் சேர்ந்த ராஜா மகன் பரமதுரை (42) என்பவரை போலீஸார் கடந்த 13 ஆண்டுகளாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், பரமதுரை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீஸார் நேற்று பரமதுரையை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமதுரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பழவூர் நாறும்பூநாதர் கோயில் சிலை திருட்டு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நடராஜர், சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் ஆகிய 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது என்றும் மொத்த சிலைகளின் மதிப்பு இதைவிடப் பல மடங்கு இருக்கும் என்று போலீஸார் கூறுகின்றனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications