சிலை திருட்டு வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது
பழவூர் நாறும்பூநாதர் கோயில் சிலை திருட்டு வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி பரமதுரை கைது செய்யப்பட்டார்.
சென்னை: சிலை திருட்டு வழக்கில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளைத் திருடியதாக 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று சென்னையில் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் நாறும்பூநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து 2005 ஆம் ஆண்டில் 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இந்த சிலைகள் திருடு போனது தொடர்பாக சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 18 பேர்கள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த 18 பேரில் சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேர் பல்வேறு சிலை திருட்டு வழக்குகளில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 6 பேர் வெளிநாடுகளில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. மற்ற 2 பேரை போலீஸார் தேடி வந்தனர்.
இதையடுத்து, பழவூர் நாறும்பூநாதர் கோயில் சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் பரமதேவன்பட்டியைச் சேர்ந்த ராஜா மகன் பரமதுரை (42) என்பவரை போலீஸார் கடந்த 13 ஆண்டுகளாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், பரமதுரை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீஸார் நேற்று பரமதுரையை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமதுரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பழவூர் நாறும்பூநாதர் கோயில் சிலை திருட்டு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நடராஜர், சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் ஆகிய 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது என்றும் மொத்த சிலைகளின் மதிப்பு இதைவிடப் பல மடங்கு இருக்கும் என்று போலீஸார் கூறுகின்றனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications