ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது.. எடப்பாடியார் அதிரடி!
ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவை: ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தினகரன் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். எப்படியாவது ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என அவர் தினகரன் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார்.
இதற்காக முதல்வர் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் , அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை வளைக்கும் பணியிலும் தினகரன் ஈடுபட்டுள்ளார். இன்று எம்எல்ஏவாக பதவியேற்ற அவர், இன்னும் 3 மாதத்தில் இந்த ஆட்சி முடிந்துவிடும் என்றார்.

வேண்டுமென்றே வீண்பழி
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிலர் வேண்டுமென்றே அதிமுக அரசு மீது வீண் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம்சாட்டினார்.

பதில் கூற முடியாது..
பாஜக கூட்டணி குறித்து அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வரும் நிலையில் அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வருவதற்குள் கூட்டணி குறித்த கற்பனை கேள்விக்கு பதில் கூற முடியாது என்றார்.

ஆயிரம் தினகரன் வந்தாலும்
மேலும் தினகரன் ஆட்சி கவிழும் என பேசி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர், இதுபோல் ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது என்று கூறினார்.

குருமூர்த்தியே மறுப்பு
மேலும் ஆடிட்டர் குருமூர்த்தி டிவிட் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தரக்குறைவான கருத்து தெரிவிக்கவில்லை என குருமூர்த்தியே மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.

ரஜினி கட்சி தொடங்கினால்
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும் செய்தியாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார். ரஜினி கட்சி தொடங்கினால் அதுபற்றி பேசலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications