தைரியம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும் ரஜினிகாந்த்... அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
தைரியமானவராக இருந்தால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லை: தைரியமானவராக இருந்தால் அரசியலுக்கு ரஜினி உடனே வரவேண்டும் என்று நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தாமிரபரணி ஆறு பாதுகாப்பு பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று இரவு நடந்தது. இதில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசுகையில்," தமிழகத்தில் உள்ள 33 ஆறுகளில் தண்ணீர் ஓடவில்லை. ஆனால் தண்ணீர் ஓடக்கூடிய ஒரு ஜீவநதி தாமிரபரணி தான். இந்த ஆற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். மழைக்காலங்களில் வீணாக கடலுக்கு செல்கின்ற தண்ணீரை தடுப்பணைகள் மூலமாகவும், வெள்ளநீர் கால்வாய் திட்டம் மூலமும் பாதுகாக்க வேண்டும்.
மணல் கொள்ளை நடப்பதை தடுக்கவேண்டும். இல்லை என்றால் தாமிரபரணி சென்னையில் ஓடுகின்ற கூவம் நதியை போல் ஆகிவிடும்.

நாட்டைச் சீரழித்த திமுக, அதிமுக
50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க., தி.மு.க. நாட்டை சீரழித்துவிட்டனர். புதிய அணைகள் எதுவும் கட்டவில்லை. தமிழகத்தை வளப்படுத்த என்னால் மட்டும் தான் முடியும். நீங்கள் மாற்றத்தை கொடுங்கள் நான் முன்னேற்றத்தை தருகிறேன்.

சாராய ஆலைகளை மூடுங்கள் ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் உங்கள் கட்சி நிர்வாகிகள் நடத்தும் மது ஆலைகளை மூடுங்கள். தமிழகத்திற்கு மத்திய அரசு பல துரோகங்களை செய்து வருகிறது.

மக்களை ஏமாற்றும் நடிகர்கள்
தமிழக மக்கள் நடிகர்களை தான் நம்புகிறார்கள். இதனால் தான் நடிகர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ரஜினிகாந்த் எனது திருமணத்திற்கு முன்பே அரசியலுக்கு வருவதாக கூறினார். அவர் எனது பேரன் திருமணத்தின் போது கூட அரசியலுக்கு வரமாட்டார்.

கோழைத்தனம் கொண்டவர் ரஜினி
தைரியமானவராக இருந்தால் உடனே வரவேண்டும். வருவேன்.. வருவேன் என்று ஏமாற்றி கொண்டு இருப்பவர். கோழை தனம் கொண்டவர் ரஜினி.

ஆட்சி செய்ய நடிகர்கள் தேவையில்லை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினால், அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் தமிழகத்தை ஆட்சி செய்ய நடிகர்கள் தேவையில்லை. நல்ல நிர்வாகிகள், நல்ல ஆட்சியாளர்கள், இளைஞர்கள், படித்தவர்கள் தேவை." என்று அன்புமணி பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications