எதற்கு சுழற்நாற்காலி...பட்டியலின ஊராட்சி தலைவருக்கு இழிவு...தர்ணாவில் பிரியா !!
மன்னம்பந்தல்: சுழற்நாற்காலி வாங்குவது குறித்து இழிவாக பேசி இருந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் அவரது கணவர் மீது மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவரான பட்டியலினப் பெண் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரையடுத்து தலைமறைவான இவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவருக்கு பிரியா பெரியசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண். இவருக்கு வயது 23. தேர்தலுக்குப் பின்னர் திமுகவில் இணைந்தார். அலுவலகத்துக்கு தளவாடப் பொருட்கள் வாங்கும்போது, சுழற்நாற்காலியும் வாங்கியுள்ளார். இதற்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமலா ராஜகோபால் எதிர்ப்பு தெரிவித்தாக பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவரும் விமர்சித்ததாக பிரியா தெரிவித்துள்ளார். இத்துடன் வளர்ச்சி திட்டங்களுக்கு துணைத்தலைவர் கையெழுத்திட மறுப்பதாகவும் கூறி பிரியா மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications