குரங்கணி தீ விபத்து: விசாரணை அதிகாரியை நியமித்தது தமிழக அரசு
குரங்கணி காட்டு தீவிபத்து குறித்து விசாரணை அதிகாரியை தமிழக அரசு நியமித்தது.
Recommended Video

சென்னை: குரங்கணி காட்டு தீ ஏற்பட்டதற்கான காரணம் அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர். அவர்களுள் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்தது.
அப்போது மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த விபத்தில் திரும்பும் திசையெல்லாம் தீ பற்றி எரிந்ததால் தப்ப வழியின்றி 9 பேர் உடல் கருகினர்.

100 சதவீத தீக்காயம்
10 பேர் எவ்வித காயங்களின்றி உயிர் தப்பினர். மீதமுள்ள 17 பேர் தேனி, மதுரை தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 100 சதவீத தீக்காயம் அடைந்த நிஷா, திவ்யா ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.

4 தனிப்படை அமைப்பு
இதையடுத்து இறப்பு எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

2 மாதங்களுக்குள் அறிக்கை
இந்நிலையில் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2 மாதங்களுக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

பரிந்துரைகள் செய்ய உத்தரவு
விசாரணை அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையில் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சிக்கு சென்றது குறித்து விசாரிப்பார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறா வண்ணம் பரிந்துரைகளை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications