குரங்கணி தீ விபத்து: விசாரணை அதிகாரியை நியமித்தது தமிழக அரசு
குரங்கணி காட்டு தீவிபத்து குறித்து விசாரணை அதிகாரியை தமிழக அரசு நியமித்தது.
Recommended Video

சென்னை: குரங்கணி காட்டு தீ ஏற்பட்டதற்கான காரணம் அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர். அவர்களுள் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்தது.
அப்போது மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த விபத்தில் திரும்பும் திசையெல்லாம் தீ பற்றி எரிந்ததால் தப்ப வழியின்றி 9 பேர் உடல் கருகினர்.

100 சதவீத தீக்காயம்
10 பேர் எவ்வித காயங்களின்றி உயிர் தப்பினர். மீதமுள்ள 17 பேர் தேனி, மதுரை தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 100 சதவீத தீக்காயம் அடைந்த நிஷா, திவ்யா ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.

4 தனிப்படை அமைப்பு
இதையடுத்து இறப்பு எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

2 மாதங்களுக்குள் அறிக்கை
இந்நிலையில் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2 மாதங்களுக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

பரிந்துரைகள் செய்ய உத்தரவு
விசாரணை அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையில் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சிக்கு சென்றது குறித்து விசாரிப்பார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறா வண்ணம் பரிந்துரைகளை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications