போயஸ் தோட்டம் யாருக்கு.... அத்தை சசிதான் சொல்வார்... திவாகரன் மகன் ஜெயானந்த்
போயஸ் தோட்டம் யாருக்கு என்பது குறித்து அத்தை சசிகலாதான் சொல்வார் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்தார்.
சென்னை: போயஸ் தோட்டம் யாருக்கு என்பதை எனது அத்தை சசிகலாதான் சொல்வார் என்று இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் ஜெயானந்த் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இந்நிலையில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அதிமுக தனக்குதான் சொந்தம் என்றும், அத்தையின் அரசியல் வாரிசு தான்தான் என்றும் தீபா வேறு கிளம்பினார்.
அவருக்கு துணையாக அவரது கணவர் மாதவனும் களமிறங்கினார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி தீபா அரசியல் அமைப்பை தொடங்கினார்.

அதிமுக மீட்பேன்
மேலும் அதிமுகவையும் , இரட்டை இலையையும் மீட்பதற்காகவே அரசியல் அமைப்பை தொடங்கியுள்ளதாக தீபா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்த தயாராகினர்.

தினகரனை ஒதுக்கி வையுங்கள்
தினகரன், சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு இணைப்பு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என ஓபிஎஸ் அணி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதை ஏற்று தினகரனை ஒதுக்கி வைத்ததாக எடப்பாடி கோஷ்டியினர் அறிவித்தனர். இதனிடையே இரட்டை இலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார். ஜாமீன் பெற்று சென்னை வந்துள்ளார் தினகரன்.

போயஸ் தோட்டத்தில் தீபா
இதனிடையே கடந்த வாரம் தீபா பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அத்தையின் போயஸ் தோட்டம் தனக்கே சொந்தம் என்று கூறி அங்கு அத்துமீறி நுழைந்தார் தீபா. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீபாவை தீபக் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறினார். இதைத் தொடர்ந்து அத்தையின் திராட்சை தோட்டத்தையும், போயஸ் தோட்டத்தையும் தான் மீட்பேன் என்றும் தெரிவித்தார்.

ஜெயானந்த் பேட்டி
இந்தியா டுடேவுக்கு திவாகரனின் மகன் ஜெயனாந்த் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், தீபா பற்றி பேசுவது அர்த்தமே இல்லை என்று நான் கருதுகிறேன். ஜெயலலிதா உயில் எழுதி வைத்தாரா என்பது குறித்து சசிகலாதான் சொல்வார். அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாதவர்தான் தீபா.

போயல் தோட்டம்
போயஸ் தோட்டத்துக்கு வந்த தீபாவை யாரும் மிரட்டவில்லை. போயஸ் கார்டன் யாருக்கு சொந்தம் என்பது குறித்து எனது அத்தை சசிகலாதான் சொல்லமுடியும் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications