செந்தில் பாலாஜி வீட்டில் நாள் முழுவதும் நடந்த அதிரடி வருமான வரி சோதனை!
கரூர்: சட்டசபைத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் சென்னையில் உள்ள அவரது நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.
ரகசியமாக நடந்த இந்த ரெய்டுக்குப் பிறகே அரவக்குறிச்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட தகவலை நேற்று இரவு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை இந்த சோதனை நடந்தது.
அதேபோல செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் ரகசிய சோதனை நடந்தது. கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டு உள்ளதாக வந்த தகவலையடுத்து சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த ரெய்டுகளைத் தொடர்ந்தே தேர்தல் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜியும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியும் அரவக்குறிச்சி தொகுதியில் மிகப் பெரிய அளவில் பணத்தை வாரியிறைத்து வந்ததாக ஆரம்பத்திலிருந்தே புகார்கள் குவிந்தன. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல வழிகளில் முயன்றும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியவில்லை. இதனால்தான் வேறு வழியில்லாமல் தேர்தலை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
செந்தில் பாலாஜிக்கும், மேலும் சில அமைச்சர்களுக்கும் நெருக்கமானவராக கூறப்படும் அன்புநாதன் தான் முதலில் இந்த வழக்கில் சிக்கியவர். அவரது கிட்டங்கியில் ரூ. 5 கோடி அளவுக்கு ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications