நாகர்கோவில்: தீபா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்கள் ஏமாற்றம்
நாகர்கோவிலில் ஜெ.தீபா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி அழைத்துவரப்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டனர்.
Recommended Video

நாகர்கோவில் : நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுக்கூட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி அழைத்துவரப் பெண்கள் ஏமாற்றப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெ.தீபா கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால், நலத்திட்ட உதவிகள் வாங்குவதற்காக ஏராளமான பெண்களும், பொதுமக்களும் கூட்டத்திற்கு அழைத்துவரப்பட்டு இருந்தனர். கூட்டத்தில் ஜெ.தீபா உரையாற்றிவிட்டு, ஐந்து நபர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கிச் சென்றார்.
இதனையடுத்து கட்சி நிர்வாகிகளும் கலைந்து சென்றனர். இதனால் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு இருந்த பெண்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், கூட்டம் முடிந்ததும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் நிர்வாகிகள் அவ்வாறு செய்யாமல் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல் பொதுக்கூட்ட மேடையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக வரவழைக்கப்பட்டிருந்த நாடகக் கலைஞர்களுக்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் உரியத்தொகை தராததால் ஊருக்கு செல்ல வழியின்றி தவித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் ஜெ.தீபா கட்சியினரின் இந்த நடவடிக்கையால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications