ஜல்லிக்கட்டுக்கு தடை: மதுரை ஆட்சியரிடம் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த அலங்காநல்லூர் மக்கள்
மதுரை: ஜல்லிக்கட்டு தடையை திரும்ப பெறக் கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்தனர். அவர்களை சமாதானப்படுத்திய ஆட்சியர் சுப்ரமணியன், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மக்கள் அவசரப்பட்டு வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. அதனை எதிர்த்து விலங்குகள் நல வாரியமான பெடா, உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்கால தடை விதித்தது. அதனையடுத்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தேர்தலை புறக்கணிக்க அலங்காநல்லூர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதித்ததை எதிர்த்து அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதற்காக அவர்கள் பேரணியாக சென்றனர். அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் நூற்றுக்கணக்காகனார் மதுரையில் பேரணி சென்றனர். இதற்கென அப்பகுதியினர் பல வாகனங்களில் காந்தி மியூசியத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்
மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அலங்காநல்லூர்வாசிகள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெடா அமைப்புக்கு தடை கோரியும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது அவர்களிடம் பேசிய ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த மக்களிடம் ஜல்லிக்கட்டு தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும் என உறுதி கூறினார். தற்போது ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை மட்டுமே விதிக்கப்பட்டள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்ட ஆட்சியர், மக்கள் அவசரப்பட்டு வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications