அவசர சட்டம் மீதும், அரசியல்வாதிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையில்லை ஏன்?
சென்னை: அவசர சட்டத்தை நம்பி, ஏமாறி, ஏமாறிய சோகத்தால்தான் தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கேட்டு போராட்டத்தை தொடருகிறார்கள்.
அரசியல்வாதிகளை மக்கள் நம்பி ஏமாந்து போனதன் தொடர்ச்சியாகத்தான், ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் எந்த ஒரு அரசியல்வாதிதையும் உள்ளேவிடவில்லை. வருடா வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி, ஆளும் கட்சியினரும் கருத்து கூறி வந்த நிலையில், எதுவுமே நடக்கவில்லை. அரசியல்வாதிகள் ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டது.

அதே அவநம்பிக்கை இப்போதும் தொடருகிறது. எனவேதான் அவசர சட்டத்தை அவர்கள் நம்பவில்லை. ஏனெனில், ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற வேண்டும், விலங்கின பட்டியலில் இருந்து காளையை மத்திய அரசு நீக்க வேண்டும். மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
அதேநேரம், அவசர சட்டம் உதவாது என்று கூறப்படுகிறது. 2008ல் திமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றி ஜல்லிக்கட்டை நடத்தினர். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வழக்குகள் காரணமாக ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. ஒவ்வொரு முறை அவசர சட்டம் இயற்றுவதும் நடத்துவதுமாக இருந்த நிலையில், காளையை காட்சிப் பட்டியலில் சேர்த்ததால் அதற்கும் பங்கம் வந்தது. சுப்ரீம் கோர்ட் அவசர சட்டத்தை எளிதாக தடை செய்துவிட முடிந்தது.
இதையடுத்து, அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 3 வருடங்களாக, ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் போனது. எனவேதான் அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டமே தீர்வு என்கிறார்கள் மக்கள். இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சியை விட்டுவிட்டால் பிறகு தங்கள் கோரிக்கை நிறைவேறாது என மக்கள் அஞ்சுவதால், சூட்டோடு சூடாக நிரந்தர சட்டம் கேட்கிறார்கள் மக்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications