புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 1028 காளைகள் - மாடுகள் முட்டி 16 பேர் காயம்
புதுக்கோட்டை அருகே தொண்டைமான் நல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 1028 காளைகள் சீறிப்பாய்ந்தன.
புதுக்கோட்டை: கீனூர் அருகே தொண்டைமான் நல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1028 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை சுகாதாரதுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இதில் மாடு முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தொண்டைமான் நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த ஒரு வாரமாக கிராமத்தினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதி பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி வேண்டி விண்ணப்பம் அளித்திருந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் வாடிவாசலை பார்வையிட்ட வருவாய்த் துறையினர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கினர்.

இதை தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக 248 மாடுபிடி வீரர்களை போலீசார், மருத்துவர்கள் உரிய முறையில் சோதனை செய்த பிறகு அனுமதித்தினர்.
ஜல்லிக்கட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 1,028 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளி பாய்ந்து ஓடியது. மாடுகளை மடக்கி பிடித்த வீரர்களுக்கு பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications