லோக்சபா தேர்தல்: ஓ.பி.எஸ். உட்பட 3 அமைச்சர்களின் உறவினர்களுக்கு சீட் தர மறுத்த ஜெ.!

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா நேற்று வெளியிட்டிருந்தார். அதில் 37 பேர் புதுமுகங்கள். 3 பேர் சிட்டிங் எம்.பிக்கள்.
ஓ.பி.எஸ். மகன்
இந்த புதுமுகங்களில் எவரும் அரசியல் வாரிசுகளோ, தற்போதைய அமைச்சர்களின் உறவினர்களோ இல்லை. அதிமுகவில் ஓராண்டுக்கும் மேலாக தேனி லோக்சபா தொகுதியை தமது மகன் ரவீந்திரநாத்குமாருக்காக குறிவைத்து காய் நகர்த்தி வந்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆனால் நேற்றைய வேட்பாளர் பட்டியலில் தேனியில் பார்த்திபன் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார்.
"நத்தம்" மைத்துனர் கண்ணன்
இதேபோல் திண்டுக்கல் லோக்சபா தொகுதியை தமது மைத்துனர் கண்ணனுக்காக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குறிவைத்திருந்தார். நத்தம் தொகுதி அதிமுக செயலாளராக இருந்தபோதும், மாவட்டம் முழுவதும் அமைச்சர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கண்ணனும் பங்கேற்று வந்தார். எப்படியும் எம்.பி. ஆகிவிடுவோம் என்ற கோதாவில் மூத்த நிர்வாகிகளையும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார் கண்ணன்.
தற்போது அவருக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனராம் . திண்டுக்கல் தொகுதியில் நிலக்கோட்டை உதயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தமது அக்கா மகனுக்காக மதுரை தொகுதியை குறிவைத்திருந்தார். ஆனால் மதுரை துணைமேயர் கோபாலகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஓராண்டுக்கும் மேலாக காய் நகர்த்தியும் 'வடை போச்சே' என்கிற வகையில் பெருத்த ஏமாற்றத்துடன் இருக்கின்றனராம் இந்த மூன்று அமைச்சர்களும்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications