காங்கிரஸுக்கு சவுக்கடி கொடுங்கள்.. ஜெ. ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் சந்தித்தது இன்னல்களை மட்டுமே. சர்வாதிகார, ஊழல் ஆட்சியை விரட்டியடித்து, மக்கள் அவர்களுக்கு சவுக்கடி தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

கடலூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் அருண்மொழித்தேவனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்தார்.

Jaya wants people to erase Congress from the nation

அப்போது அவர் கூறுகையில், 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். மத்தியில் உள்ள சர்வாதிகார, ஊழல் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். தன்னலக்காரர்களுக்கு மக்களவை தேர்தலில் சவுக்கடி கொடுக்கவேண்டும்.

40 தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். 40 தொகுதியிலும் வென்று தாய்நாட்டை காப்போம்.

அதிமுக வேட்பாளர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக நலன் பாதுகாக்கப்படும். வேறு யாருக்கும் வாக்களிக்காதீர்கள். அப்படி வாக்களித்தால் உங்கள் வாக்குகள் வீணாகி விடும்.

திமுக ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை. விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ், திமுகவே காரணம் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+