சிறையில் ஜெயலலிதாவுக்கு சகல வசதிகள்: ஓ.பி.எஸ் பதவியேற்பை டிவியில் பார்த்தார்!!
சென்னை: பெங்களூர் சிறைச்சாலையில் இருந்தபடி பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதா இருப்பது விஐபிகளுக்கான சிறை என்பதால், அவரது கோரிக்கையை ஏற்று எல்சிடி டிவி, பிரிட்ஜ் போன்ற வசதிகளை கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.

அவரது அறையிலுள்ள கதவு, ஜன்னல்களுக்கு திரைச்சீலை போடப்பட்டு வெளியில் இருந்து யாரும் ஜெயலலிதாவை பார்க்க முடியாதபடி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்காக, அவர் தங்கியுள்ள செல் முற்றிலும் நவீனமாக்கப்பட்டுள்ளது. வாஷ் பேசின், மேற்கத்திய ஸ்டைல் கழிவறை போன்றவை அமைக்கப்பட்டதாக கூறுகின்றனர் போலீஸ் அதிகாரிகள்.
பரப்பன அக்ரஹாராவில் மூத்த பெண் அதிகாரி இல்லாத காரணத்தால் மைசூர் மத்திய சிறையில் இருந்து பெண் அதிகாரியை 24 மணி நேர பாதுகாப்புக்காக பெங்களூர் அழைத்து வந்துள்ளது சிறை நிர்வாகம்.
ஜெயலலிதா இசெட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால், இன்ஸ்பெக்டர்களுக்கு கீழ் அதிகாரத்திலுள்ள போலீஸ் அதிகாரிகள் ஜெயலலிதா இருக்கும் செல் பக்கம் போக வேண்டும் என்றால்கூட சிறையின் தலைமை கண்காணிப்பாளர் அல்லது சிறைத்துறை டிஐஜி அனுமதி அவசியம்.
ஜெயலலிதா குறித்த தகவல்களை அவ்வப்போது மீடியாக்களுக்கு கசியவிடாமல் இருப்பதற்காக, சிறைக்குள் பணியாற்றும் போலீசார் செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை சிறையிலுள்ள தொலைக்காட்சி மூலமாக ஜெயலலிதா பார்த்ததாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications