கனவு காண்கிறார் கமல்.. தமிழிசையின் கிண்டலுக்கு.. கமல்ஹாசன் நச் பதிலடி!
கனவுகளிலிருந்துதான் பல கண்டுபிடிப்புகள் உருவாகின என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: அரசியல், ஆட்சி அதிகாரம் குறித்து கனவு காண்கிறார் என்று தன்னை விமர்சித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
சினிமா துறையில் தடம் பதித்த கமல் ஹாசன் தற்போது அரசியலிலும் தடம் பதிக்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை செய்த வண்ணம் உள்ளார்.
இதனிடையே மக்கள் பிரச்சினைகளையும் தற்போது களத்துக்கு சென்று ஆராய்ந்து வருகிறார்.
கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளால் வடசென்னைக்கு ஆபத்து என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் கமல் குரல் எழுப்பியதோடு மட்டுமல்லாமல் நேரில் சென்று பார்வையிட்டார்.

விவசாயிகளை சந்தித்த கமல்
இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு விவசாயிகளை நடிகர் கமல் சந்தித்து பேசினார். அப்போது கமல் கூறுகையில் ஏரி, குளங்களை தூர்வார 5 லட்சம் பேரை அனுப்புவதாகவும் அவர்களிடம் விவசாயிகள் தங்கள் குறைகளை கூறினால் உதவுவதாகவும் கமல் தெரிவித்தார். மக்கள் பிரச்சினையை கையிலெடுத்த கமல் தற்போது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் பிரச்சினையிலும் தலையிட்டுள மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.

அழிவு வரும் வரை காத்திருக்க...
இதையடுத்து ரசிகர்களுடன் கமல் சந்தித்து பேசினார். அப்போது கொற்கையில் சுனாமி வந்ததால் பாண்டியர் தலைநகர் மதுரைக்கு போனது. வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். எப்போதும் அழிவு வரும்வரை காத்திருக்க வேண்டியது இல்லை. 35 ஆண்டுகால உழைப்பு காணாமல் போய்விட்டதாக கருதுகிறேன் என்றார்.

தமிழிசை கருத்து
ரசிகர்களுடனான சந்திப்பின் போது கமல் பேசுகையில் விரைவில் தனிக்கட்சியை ஆரம்பிக்க போகிறேன். அதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார். இதற்கு தனியார் தொலைகாட்சி சேனலுக்கு தமிழிசை அளித்த பேட்டியில், அரசியல் கட்சி தொடங்கட்டும். களத்தில் குதிக்கட்டும். மக்கள் யார் பக்கம் என்பதை பார்ப்போம். அவர் ஏதோ கனவு காண்கிறார் என்று விமர்சித்திருந்தார்.

தமிழிசைக்கு பதிலடி
தனது பிறந்தநாளான இன்று ஆவடியில் மருத்துவ முகாமை கமல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நான் ஏதோ கனவு காண்கிறேன் என்று சிலர் விமர்சிக்கின்றனர். கனவுகளிலிருந்துதான் பல கண்டுபிடிப்புகள் உருவாகின. காணும் கனவுகளை நிஜமாக மாற்ற நாங்கள் பாடுபடுவோம் என்றார். பெயரை கூறாவிட்டாலும் இது தமிழிசைக்கு கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications