பெண் நிருபர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?- கனிமொழி கேள்வி
பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய பாஜக பிரமுகர் எஸ்.வி. சேகரை கைது செய்யாதது ஏன் என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த பின்பும் கைது செய்யாதது ஏன் என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு அவரது கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அந்த பெண் நிருபர் தனது டுவிட்டர் பக்கத்தில் கோபத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து ஆளுநர் தனது செயலுக்கான விளக்கத்தை கூறி மன்னிப்பும் கேட்டார்.

பெண் நிருபர்கள்
மன்னிப்பை ஏற்பதாகவும் ஆனால் கன்னத்தை தட்டியதற்காக ஆளுநரின் காரணத்தை ஏற்க முடியாது என்று அந்த பெண் நிருபர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த சம்பவம் பூதாகரமாக இருந்த நிலையில் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் நிருபர்கள் குறித்து தரக்குறைவாக பதிவிட்டிருந்தார்.

முற்றுகை
இந்த பதிவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார். இதையடுத்து அவர் தனது நண்பர் அனுப்பிய கருத்தை பார்க்காமல் பார்வார்டு செய்ததாக கூறி மன்னிப்பும் கோரினார். இதை பத்திரிகையாளர்கள் ஏற்கவில்லை. அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தடை இல்லை
இந்த நிலையில் எந்த நேரத்திலும் தாம் கைது செய்யப்படுவோம் என்று கருதிய எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கோடை கால நீதிமன்றத்துக்கு மாற்றிய நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எஸ்வி. சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்டார்.

வியப்படைந்த கனிமொழி
முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்ட பிறகும் எஸ் வி. சேகரை கைது செய்யாதது ஏன் என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கனிமொழி கூறுகையில், பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட பிஜேபி உறுப்பினர் எஸ்வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னும், காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.
|
டுவிட்டரில் பதிவு
இழிவாக ஒரு பதிவு செய்துவிட்டு, பின்னர் அதை நீக்குவதும், வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமாகி வருகிறது. விமர்சனம் செய்ய அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது, ஆனால் அவதூறு செய்ய அல்ல. காவல்துறை இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று டுவிட்டரில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications