சுங்க சாவடி விவகாரம்: கன்னட அமைப்பினர் சாலை மறியல்- எல்லையில் போக்குவரத்து பாதிப்பு!!
ஓசூர்: தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சுங்கச் சாவடி அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை பெங்களூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக கர்நாடக எல்லையில் அத்திப்பள்ளி சங்கச் சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் வாகனம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இந்தச் சுங்கச் சாவடியை கடந்து செல்ல வேண்டும்.
இந்தச் சுங்கச் சாவடியில் வேலை செய்து கொண்டிருந்த 24 பேர் கடந்த வாரம் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.அவர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கையாகும்.
இது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் தலைவர் மாநிலத் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் நிர்வாகிகள் முனிராஜ், நாகராஜ், வெங்கடேஷன், தேவராஜ் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போக்குவரத்து பாதிப்பால் பயணிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications