கன்னியாகுமரியில் தனியார் லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!
கன்னியாகுமரி, தலக்குளத்தில் தனியார் லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி: தென் தாமரைகுளம் அருகே டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே உள்ளது தலக்குளம். இங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான சுமார் 25க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன.

இந்த ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதே தலக்குளம் பகுதியில் தனி நபர்களுக்கும் ஏராளமான ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன.
அவர்கள் இங்கிருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். ஆனால், குடிநீர் வடிகால் வாரியம் இப்பகுதியில் 40 முதல் 50 அடி வரை ஆழத்தில் மட்டுமே ஆழ்குழாய் கிணறுகளை அமைத்துள்ளது. தனியார் நிறுவனங்கள் பல நூறு அடி ஆழம் வரை போர் போட்டு தண்ணீர் உறிஞ்சி எடுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனால் பல்வேறு ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டன.
தற்போது தண்னீர் இல்லாத சூழலில், தனியார் போர்களில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடித்து செல்லப்படுகிறது. இதனால் நீர் மட்டம் குறைந்து, குடிநீரின் தன்மையும் மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கடந்த வாரம் குமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் பொது மக்கள் தண்ணீர் லாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போராட்டம் இரவு வரை நீடித்ததால் பொதுமக்களிடம் கன்னியாகுமரி டிஎஸ்பி வேணுகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தை கைவிடுமாறு கேட்டு கொண்ட அவர் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications