கபினி அணை நிரம்பியது: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர்: கபினி அணை முழுவதுமாக நிரம்பியதால், மேட்டூர் அணைக்கு காவிரியில் நீர் முழுவதுமாகத் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகளில் தொடர் கனமழை கொட்டி வருகிறது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது.
கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது

திறக்கப்பட்ட கபிணிஅணை
கபினி அணை முற்றிலும் நிரம்பியதை அடுத்து அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 17 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியேறிய நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வியாழக்கிழமை காலை வந்தடைந்தது.
கே.ஆர்.எஸ். அணை
இதேபோல,கர்நாடக மாநிலத்தில் மற்றொரு முக்கிய அணையான கே.ஆர்.எஸ். அணை மண்டியாவில் அமைந்துள்ளது. 124.40 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 91.30 அடி நீர் இருப்பு உள்ளது.
இந்த அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 747 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் 10 ஆயிரத்து 128 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
19 ஆயிரம் கனஅடிநீர்
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காலையில் 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 19 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 48 அடியாக இருந்தது. நீர் இருப்பு 16.53 டி.எம்.சி.யாக இருந்தது. அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications