மின் வாரியத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழல்.. விளக்கமளிப்பாரா ஜெ.?.... கேட்கிறார் கருணாநிதி
சென்னை: தமிழகத்தில், திட்டமிட்டு மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி, மின் வாரியத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி முதல்வர் ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற மின் வாரிய பணியாளர், செல்வராஜ் என்பவர், பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அதில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமைப் பொறுப்பில், நீண்ட காலம் இருந்த சில அதிகாரிகள், செயற்கையான முறையில் மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், புதிய மின் திட்டங்கள் உருவாவதை தடுத்தனர். ஏற்கனவே பணிகள் நடந்து வந்த மின் திட்டங்களை தாமதப்படுத்தினர்.
அதை சரிக்கட்ட, தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து, அபரிமிதமான விலை கொடுத்து, மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதற்காக, மாநில அரசுக்கு சொந்தமான, மூன்று மின் உற்பத்தி நிலையங்களில், மின் உற்பத்தியை நிறுத்தி, மின் பற்றாக்குறையைச் செயற்கையாக உருவாக்கினர்.

பல ஆயிரம் கோடி முதலீடு
அதுமட்டுமல்ல, காற்றாலை மின் பிரிவின் மூலமாக மட்டும், 24,309 கோடி ரூபாய், கையாடல் செய்யப்பட்டு உள்ளது; அந்த கையாடல் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மின்சார மீட்டர் வாங்குவதில், 6,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

ரூ.1 லட்சம் கோடி
அந்த முறைகேட்டுக்கு பின்னும், 4,500 கோடி ரூபாய்க்கு, மின்சார மீட்டர் கொள்முதல் செய்துள்ளனர் என்றெல்லாம், புகாரில் தெரிவித்திருக்கிறார், அந்த மின் வாரிய அலுவலர். அவர் முடிவாகக் கூறும் போது, 'ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் நடந்திருக்கும் இந்த ஊழல் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ஏற்படுத்த வேண்டும்' என்றும் தெரிவித்திருக்கிறார்.

உயர்நீதிமன்றம் கேள்வி
இந்த வழக்கில், பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஏராளமான கேள்விகளை எழுப்பியதோடு, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உயர் நீதிமன்ற ஆய்வுக்காக, ஆகஸ்ட் 10ம் தேதிக்குள், சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கின்றனர்.

முதல்வர் விளக்கம் தருவாரா?
இந்த பொதுநல மனுவுக்கு, உயர் நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளித்திடும் அதே வேளையில், முதல்வர் ஜெயலலிதா, மக்கள் மன்றத்திலும் விளக்கமளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications