வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்... அவர் கருணாநிதியை காணாதவர்!
மரண போராட்டத்தையும் வென்று வருவார் கருணாநிதி என்கின்றனர் தொண்டர்கள்.
Recommended Video

சென்னை: மரணத்துடன் போராடி வரும் தன் தலைவன் கண்டிப்பாக மீண்டு வருவார் என தொண்டர்கள் 200 சதவீத நம்பிக்கையை உரத்த குரலில் சொல்லி வருகிறார்கள்.
காவிரி மருத்துவமனையின் 7-வது அறிக்கையும் வந்துவிட்டது. அவரது உடல் மிகவும் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தொண்டர்களோ, எத்தனையோ போராட்டங்களை எதிர்த்து வெற்றி கண்டவர் என் தலைவர், இந்த போராட்டத்திலும் மீண்டு வருவார் என கண்ணீர் பெருக்குடன் கூறுகிறார்கள்.

என்ன ஒரு அபரிமிதமான நம்பிக்கை!? ஆனால் அந்த நம்பிக்கையின் பின்னணியில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ஏராளமான தழும்புகள் உள்ளன. ஏராளமான வரலாறுகள் உள்ளன.
கருணாநிதிக்கு இந்த போராட்டம் புதிதா என்ன? அவரது முதல் மற்றும் கடைசி போராட்டமும் தமிழகம் அறிந்ததே.. தமிழகம் உணர்ந்ததே... தமிழகம் சுவாசித்ததே..
10 வயதிலேயே போராட்டத்தை கையிலெடுத்தவராயிற்றே. முதல் போராட்டமே வெற்றிதானே. அதுவும் கல்வி உரிமைக்கான போராட்டமாயிற்றே.
1936-ம் ஆண்டு, திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் தன்னை ஆறாம் வகுப்பில் பெற்றோர் சேர்த்துவிட மறுப்பு கூறும்போது, 'என்னை இப்போ படிக்கவிடலைன்னா.. எதிரே இருக்கிற தெப்பக்குளத்தில் போய் குதிச்சு உயிரை போக்கிப்பேன்" என்றார். அப்படித்தானே படிக்க துவங்கினார். இப்படி சண்டை போட்டுவிட்டு வகுப்புக்கு சென்று அங்குள்ள சுவற்றில் "மு.க." என்று எழுதிவைத்து பெருமைப்பட்ட நிகழ்வு இன்னமும் அந்த வடு மாறாமல் அங்கு இருக்கிறதே.
அப்படி முதல் போராட்டத்தில் வெற்றி கண்ட தங்கள் தலைவர் இந்த மரண போராட்டத்திலும் நிச்சயம் வெல்லுவார் என்கிறார்கள் தொண்டர்கள். ஆனால், எது எதற்கோ போராடி இன்று கடைசியில் உயிருக்காக எமனுடன் போராடி வரும் நிலையை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று நெஞ்சு குமுறி வெடிக்கிறார்கள்.
"வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர். எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது" என நெஞ்சுக்கு நீதி 2-ம் பாகத்தில் கருணாநிதி சொன்னது தற்போது எவ்வளவு நிரூபணமாகி வருகிறது?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications