முல்லைப் பெரியாறு அணை: 2ம் கட்ட பராமரிப்பு பணிக்காகச் சென்ற தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இரண்டாம் கட்ட பராமரிப்பு பணிகளுக்காக சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்கட்டமாக ஷட்டர் பகுதியை பழுது பார்த்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது 2ம் கட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று ஷட்டர்களில் ரப்பர் பொருத்தல் உள்ளிட்ட சில பணிகள் நடந்தது.
இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்குத் தேவையான தடவாளப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஜீப்பில் சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் வல்லக்கடவு பகுதியில் தடுத்து நிறுத்தினர்.
உயர் அதிகாரிகளிடம் கேட்டு அனுமதிப்பதாக கூறிய கேரள வனத்துறையினர், தமிழக அதிகாரிகளை பல மணிநேரம் காத்திருக்க வைத்தனர். பின்னர் மாலையில் அனுமதி வழக்கினர். இதனால், தமிழக ஊழியர்களின் பணி பலமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
இதற்கிடையே, அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு கேரள அரசு பிரச்சினை செய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதியில் கார் பார்க்கிங் அமைக்க மண் கொட்டிய கேரள வனத்துறை தொடர்ந்து தமிழக அதிகாரிகளுக்கு இடையூறு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications