ராஜாவும் அக்காவும் எங்கே போனாங்க.. பாஜகவை கிண்டல் செய்த குஷ்பு!
பாஜக கட்சியை சேர்ந்த எச்.ராஜாவும், தமிழிசை சௌந்தரராஜனும் காவிரி விஷயத்தில் குரல் கொடுக்காமல் இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை: பாஜக கட்சியை சேர்ந்த எச்.ராஜாவும், தமிழிசை சௌந்தரராஜனும் காவிரி விஷயத்தில் குரல் கொடுக்காமல் இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
காவிரி இறுதி தீர்ப்பு வந்த பின்பும் மத்திய பாஜக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. நேற்றோடு இதற்கான காலக்கெடு முடிந்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் தேர்தல் நடக்க உள்ளதால்தான் பாஜக கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது. இதில் தமிழக பாஜக கட்சி இதுவரை பெரிய அளவில் குரல் கொடுக்காமல் இருப்பதை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
When TN BJP speaks on anything n everything, I see none of them speaking now on #CauveryManagementBoard What happened?? Where is the famous Raja n akka?? 🙄🙄🙄🙄
— khushbusundar (@khushsundar) March 29, 2018
அவர் தனது டிவிட்டில் ''தமிழக பாஜக எல்லா விஷயத்திலும் வந்து குரல் கொடுத்தது, ஆனால் இப்போது அவர்கள் யாருமே காவிரி மேலாண்மை வாரியத்தில் குரல் கொடுக்கவில்லை. என்ன ஆகிவிட்டது? பிரபலமான ராஜாவும், அக்காவும் எங்கே போனார்கள்'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.