சாலையோரம் தூங்கிய போது கடத்தப்பட்ட குழந்தை... உடனடியாக மீட்ட போலீஸ் - வீடியோ
காரைக்குடி, செஞ்சையில் மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த போது குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. போலீசில் புகார் அளித்ததையடுத்து குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காரைக்குடி: சாலையில் வசித்து வரும் தம்பதியின் குழந்தையைக் கடத்தி சென்றவர்களிடம் இருந்து போலீசார் குழந்தையை உடனடியாக மீட்டு, தம்பதியிடம் ஒப்படைத்தனர்.
காரைக்குடி, செஞ்சைப் பகுதியை சேர்ந்தவர் அமீர். இவர் கண்ணாடி தொழில் செய்து வருகிறார். இரவு நேரத்தில் அங்குள்ள மரத்தடியில் குடும்பமாக படுத்து உறங்குவார்கள். அமீர் தம்பதிக்கு 6 மாதக் குழந்தை உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, அமீரிடம் ஒரு பெண்மணி வந்து, 'எனக்குக் குழந்தை இல்லை. என்னிடம் உங்கள் குழந்தையை தாருங்கள். நான் நல்லபடியாக வளர்த்துக் கொள்கிறேன்' என கூறியுள்ளார். அதற்கு அமீர் குழந்தையை தரும் எண்ணம் தங்களுக்கு இல்லை என கூறியுள்ளார்.
அடுத்த சில தினங்களிலேயே மரத்தடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது குழந்தை காணவில்லை. இதுகுறித்து காரைக்குடி போலீசாரிடம் அமீர் புகார் தெரிவித்தார். அதனையடுத்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடித்து அமீர் தம்பதியிடம் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் குழந்தையின்மை பல்வேறு சூழியல், உணவு, மரபுக் காரணங்களால் பெரும் பிரச்சனையாக உருவாகி வருகிறது. குழந்தையின்மையால் குழந்தையைக் கடத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இதை ஒரு சமூகப் பிரச்சனையாகக் கருதி தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications